search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குழந்தையை தவிக்க விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண் - போலீசார் விசாரணை

    மூலைக்கரைப்பட்டி அருகே குழந்தையை தவிக்க விட்டு பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் அங்கு மட்டன் கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகள் கற்பகத்திற்கும் (30), கழூவூரை சேர்ந்த சின்னத்துரை என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கற்பகம் கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தந்தை முருகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு சென்ற கற்பகம் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அப்போது அவர் தனது தாயாரின் ஏ.டி.எம் கார்டையும் எடுத்து சென்றுள்ளார். ஏ.டி.எம் கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தையும் எடுத்துள்ளார். மேலும் தனது குழந்தையையும் தவிக்க விட்டு விட்டு சென்றுள்ளார்.

    இது குறித்து முருகன் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×