search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சண்முகநாதன் எம்.எல்.ஏ.
    X
    சண்முகநாதன் எம்.எல்.ஏ.

    உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முனைப்புடன் செயல்பட வேண்டும்- சண்முகநாதன் பேச்சு

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தமிழக உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வருகிற 15, 16-ந் தேதிகளில் உரிய கட்டணங்களை செலுத்தி விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இடைத்தேர்தலை போன்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வியூகம் அமைத்துள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் அ.தி.மு.க. மேயர், நகர மன்ற தலைவர், யூனியன் சேர்மன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், டவுண் பஞ்சாயத்து தலைவர் அதற்குட்பட்ட கவுன்சிலர் பதவிகள் அனைத்தையும் வெற்றிபெற முனைப்புடன் செயல்பட வேண்டும். அதற்கு முழு மூச்சாக நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் முருகன், பொன்ராஜ், ராமகிருஷ்ணன், வழக்கீல்கள் சுகந்தன் ஆதிதன், ரவீந்திரன், செல்வகுமார், மகளிர் அணி செரினா பாக்கியராஜ், வட்ட செயலாளர்கள் முருகன், பூக்கடை வேலு மற்றும் நிர்வாகிகள் பிரபாகர் ,வெயிலுமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×