என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே பெண் ஊழியர் பலி
Byமாலை மலர்12 Nov 2019 10:25 AM GMT (Updated: 12 Nov 2019 10:25 AM GMT)
மதுரை அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த ரெயில்வே பெண் ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரை அடுத்துள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் மதுரை ரெயில் நிலையத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். தினமும் வேலைக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு விஜயலட்சுமி அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். கப்பலூர் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்க முற்பட்டபோது திடீரென டிரைவர் பஸ்சை இயக்கி உள்ளார். இதில் கால் தடுமாறி கீழே விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரை அடுத்துள்ள பள்ளக்காபட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் விஜயலட்சுமி (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர் மதுரை ரெயில் நிலையத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார். தினமும் வேலைக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு விஜயலட்சுமி அரசு பஸ்சில் வீட்டுக்கு புறப்பட்டார். கப்பலூர் பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்க முற்பட்டபோது திடீரென டிரைவர் பஸ்சை இயக்கி உள்ளார். இதில் கால் தடுமாறி கீழே விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதியினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X