என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வடக்கு தாமரைகுளத்தில் 10-ம் வகுப்பு மாணவி கடத்தல்- வாலிபர் மீது வழக்குப்பதிவு
நாகர்கோவில்:
சாமித்தோப்பு அருகே வடக்கு தாமரைகுளம் கல் குரும்பொற்றை பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொன்னீஷ் (வயது 27) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மாணவியை கண்டித்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்னீசும் மாயமாகி உள்ளார். எனவே மாணவியை பொன்னீஷ் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து மாணவியின் தாயார், கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பொன்னீஷ் மீது போலீசார் இந்திய தண்டனைச்சட்டம் 366 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
வாலிபரின் செல்போன் எண்ணை போலீசார் கைப்பற்றி உள்ளனர். செல்போன் டவர் உதவியுடன் மாணவியை மீட்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்