search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    சுவாமிமலை அருகே விபத்து: ஒருவர் பலி

    சுவாமிமலை அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருச்சேறையை அடுத்த செம்மங்குடி மேலநாகம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 56).

    இவர் நேற்று இரவு திருவையாறில் உறவினர் வீட்டில் உள்ள தந்தையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து நள்ளிவில் ஊருக்கு புறப்பட்டார்.

    அப்போது உத்தமதானபுரம் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் உமையாள்புரத்தை சேர்ந்த கார்த்திக் (22) வந்தார். திடீரென 2 மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ரவி சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக ரவியின் மகன் ராஜேஷ், சுவாமிமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×