search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    கொரட்டூர் ரெயில் நிலையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    கொரட்டூர் ரெயில் நிலையத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்து கீழே குதித்த ஒரு வாலிபரை 4 பேர் கும்பல் சூழ்ந்து கொண்டு அரிவாளால் வெட்டியது. இதில் அவர் ரத்தம் சொட்டும் நிலையில் அவர்களிடம் இருந்து தப்பி மற்றொரு ரெயிலில் ஏறினார்.

    வாலிபரை வெட்டியவர்கள் திருவள்ளூர் செல்லும் ரெயிலில் ஏறி தப்பினார்கள். இந்த சம்பவத்தால் கொரட்டூர் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாரும், கொரட்டூர் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×