search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    செம்பட்டி அருகே கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3 பேர் கைது

    செம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    செம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையிலான போலீசார் சித்தையன் கோட்டை அருகில் உள்ள நரசிங்கபுரம் கண்மாய் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து செம்பட்டி போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தி வந்த நெல்லூரை சேர்ந்த காசிராஜன் (வயது35), முத்துராமன், (38) மற்றும் செம்பட்டியை சேர்ந்த அஜித் (17) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த 9 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். காசிராஜன் மற்றும் முத்துராமனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர். அஜித்தை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    Next Story
    ×