என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூந்தமல்லி அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறிப்பு- 3 பேர் கைது
Byமாலை மலர்12 Nov 2019 6:56 AM GMT (Updated: 12 Nov 2019 6:56 AM GMT)
பூந்தமல்லி அருகே போலீஸ்காரரை தாக்கி செல்போன் பறித்தது தொடர்பாக மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி:
ஆவடியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் பூந்தமல்லி அருகே சென்னிகுப்பம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது வண்டியை நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் அவ்வழியே ரோந்து வந்த பூந்தமல்லி போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது ஆவடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கீழே பதுங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி செல்போன் பறித்து சென்றதும் தெரிந்தது. பிடிபட்ட 3 பேரும் மாணவர்கள் ஆவர். இதில் ஒருவர் 10-ம் வகுப்பும், மற்றொருவர் டிப்ளமோவும் படித்து வருகிறார்கள். அனைவரும் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் இதே போல் மேலும் பல வழிப்பறிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆவடியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று இரவு அவர் பணி முடிந்து சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் பூந்தமல்லி அருகே சென்னிகுப்பம் பைபாஸ் ரோட்டில் சென்ற போது வண்டியை நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 மர்மநபர்கள் போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிலம்பரசன் அவ்வழியே ரோந்து வந்த பூந்தமல்லி போலீசாரிடம் தெரிவித்தார். உடனடியாக அனைத்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது ஆவடி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் கீழே பதுங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், போலீஸ்காரர் சிலம்பரசனை தாக்கி செல்போன் பறித்து சென்றதும் தெரிந்தது. பிடிபட்ட 3 பேரும் மாணவர்கள் ஆவர். இதில் ஒருவர் 10-ம் வகுப்பும், மற்றொருவர் டிப்ளமோவும் படித்து வருகிறார்கள். அனைவரும் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் இதே போல் மேலும் பல வழிப்பறிகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X