search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

    ஆண்டிப்பட்டி அருகே முன்விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள பொன்னம்படுகையை சேர்ந்த செல்வம் மகன் அமரேசன் (வயது25). இவருக்கும் குமணன் தொழுவை சேர்ந்த அறிவழகன் மகன் தமிழன் (25) என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். நேற்று அமரேசன் சொந்த வேலை காரணமாக மயிலாடும்பாறைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த தமிழன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அமரேசன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழனை கைது செய்தனர்.

    Next Story
    ×