search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திண்டுக்கல் அருகே திருமண வீட்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது

    திண்டுக்கல்லில் திருமண வீட்டில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமரவேல் (வயது32) என்பவர் வந்திருந்தார்.

    உணவு சாப்பிட்டு விட்டு திரும்பிவரும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரிடம் இருந்து செல்போனை மர்ம நபர் திருடிச் சென்றார்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேற முயன்ற அந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்து நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த சவரிமுத்து மகன் பவுல்தீபன் பெலிக்ஸ் (25) என தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×