என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு சரிவு
Byமாலை மலர்11 Nov 2019 10:26 AM GMT (Updated: 11 Nov 2019 10:26 AM GMT)
மழை ஓய்ந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்தது. மழை நீடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் ஓய்ந்து விட்டது.
இதனால் அணைக்கு 909 கன அடி நீரே வருகிறது. தமிழக பகுதிக்கு 1530 கன அடி நீர் திறப்பதால் அணையின் நீர் மட்டம் 126.70 அடியாக சரிந்துள்ளது. இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது.
வைகை அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்காக 4190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் 63.48 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு 1869 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.80 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடியாக உள்ளது. 79 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்தது. மழை நீடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் ஓய்ந்து விட்டது.
இதனால் அணைக்கு 909 கன அடி நீரே வருகிறது. தமிழக பகுதிக்கு 1530 கன அடி நீர் திறப்பதால் அணையின் நீர் மட்டம் 126.70 அடியாக சரிந்துள்ளது. இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது.
வைகை அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்காக 4190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் 63.48 அடியாக சரிந்துள்ளது.
அணைக்கு 1869 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.80 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடியாக உள்ளது. 79 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X