search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கிடுகிடு சரிவு

    மழை ஓய்ந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்தது. மழை நீடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் ஓய்ந்து விட்டது.

    இதனால் அணைக்கு 909 கன அடி நீரே வருகிறது. தமிழக பகுதிக்கு 1530 கன அடி நீர் திறப்பதால் அணையின் நீர் மட்டம் 126.70 அடியாக சரிந்துள்ளது. இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேர்கிறது.

    வைகை அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் விவசாய பாசனத்துக்காக 4190 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர் மட்டமும் 63.48 அடியாக சரிந்துள்ளது.

    அணைக்கு 1869 கன அடி நீர் வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.80 அடியாக உள்ளது. 76 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.44 அடியாக உள்ளது. 79 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு பகுதியில் மட்டும் 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×