search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக தலைமையகம்
    X
    திமுக தலைமையகம்

    உள்ளாட்சி தேர்தல்: நவம்பர் 14-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறுகிறது திமுக

    உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
    சென்னை:

    தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. 

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளதாகவும், கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

    மேலும், உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

    அதிமுக சார்பில் வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்களை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×