என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே ஆசிரமத்தில் மந்திரவாதி மர்மமரணம்
Byமாலை மலர்11 Nov 2019 7:22 AM GMT (Updated: 11 Nov 2019 7:22 AM GMT)
திருவள்ளூர் அருகே ஆசிரமத்தில் மர்மமான முறையில் மந்திரவாதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வந்தவர் பனிக்கர் (65). கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர். திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் ஆசிரமம் ஒன்று கட்டி இருந்தார்.
அங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மாந்திரீகம் செய்வது மற்றும் ஜோதிடம் பார்ப்பது வழக்கம்.
கடந்த வாரம் அமாவாசையை முன்னிட்டு பனிக்கர், திருப்பாச்சூரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள அறையில் பனிக்கர் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மந்திரவாதி பனிக்கர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. முன் விரோதத்தில் அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த வாரத்தில் மந்திரவாதி பனிக்கரிடம் அவரது மகன், செல்போன் மூலம் பேசியுள்ளார். அப்போது பனிக்கர், ‘இங்கு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு வருகிறேன்’ என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து பனிக்கருடன் கடைசியாக தங்கி இருந்தவர்கள் யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூரை அடுத்த எறையாமங்கலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மர்ம பொருள் வெடித்து சாமியார் ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை, வில்லிவாக்கத்தில் வசித்து வந்தவர் பனிக்கர் (65). கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர். திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் ஆசிரமம் ஒன்று கட்டி இருந்தார்.
அங்கு பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மாந்திரீகம் செய்வது மற்றும் ஜோதிடம் பார்ப்பது வழக்கம்.
கடந்த வாரம் அமாவாசையை முன்னிட்டு பனிக்கர், திருப்பாச்சூரில் உள்ள தனது ஆசிரமத்துக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஆசிரமத்தில் உள்ள அறையில் பனிக்கர் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
மந்திரவாதி பனிக்கர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. முன் விரோதத்தில் அவரை யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த வாரத்தில் மந்திரவாதி பனிக்கரிடம் அவரது மகன், செல்போன் மூலம் பேசியுள்ளார். அப்போது பனிக்கர், ‘இங்கு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு வருகிறேன்’ என்று கூறி இருக்கிறார்.
இதையடுத்து பனிக்கருடன் கடைசியாக தங்கி இருந்தவர்கள் யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர். இதனால் அவரது சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.
இதேபோல் திருவள்ளூரை அடுத்த எறையாமங்கலத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மர்ம பொருள் வெடித்து சாமியார் ஒருவர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X