என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே ஏரியில் மணல் திருட்டு- 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்11 Nov 2019 6:31 AM GMT (Updated: 11 Nov 2019 6:31 AM GMT)
ஆவடி அருகே ஏரியில் இருந்து மணல் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த கரலப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு 1 மணிக்கு முத்தாபுதுபேட்டை போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்த போது மாகரல் பகுதியில் உள்ள ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளுவதற்காக சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்கள் ஆவடி மேட்டுத்தும்பூர் பகுதியை சேர்ந்த ரவி (41) முத்து (41) மாகரல் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (48) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X