search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஊத்துக்கோட்டை அருகே வேன் மோதி தொழிலாளி பலி

    ஊத்துக்கோட்டை அருகே வேன் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (32). ஒதப்பை பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரித்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று மாலை சங்கர் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கூனிபாளையம் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே பென்னாலூர்பேட்டையில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×