என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
17 வயது பெண்ணுடன் திருமணம் - காதல் மனைவியை பிரித்ததால் வாலிபர் திடீர் தற்கொலை
Byமாலை மலர்10 Nov 2019 4:19 PM GMT (Updated: 10 Nov 2019 4:19 PM GMT)
நாகர்கோவில் அருகே காதல் திருமணம் செய்த மனைவியை பிரித்து காப்பகத்தில் ஒப்படைத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் சக்திநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 29).
இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். 17 வயது பெண்ணை திருமணம் செய்ததால் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மைனர் பெண்ணை திருமணம் செய்தததால் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் அவர் வீட்டில் இருந்து ஓட்டம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி அவரை மீட்டு வடிவீஸ்வரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து உள்ளனர்.
இதற்கிடையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட மணிகண்டன் ஜாமீனில் வெளிவந்தார். காதல் திருமணம் செய்த மனைவியை பிரித்து காப்பகத்தில் ஒப்படைத்ததால் அவர் மன வேதனையுடன் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு மணிகண்டன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் மரணம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் கோட்டார் சக்திநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 29).
இவரும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். 17 வயது பெண்ணை திருமணம் செய்ததால் இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மைனர் பெண்ணை திருமணம் செய்தததால் மணிகண்டனை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சில நாட்கள் கழித்து அந்த பெண்ணை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். ஆனால் அவர் வீட்டில் இருந்து ஓட்டம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தி அவரை மீட்டு வடிவீஸ்வரத்தில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்து உள்ளனர்.
இதற்கிடையில் ஜெயிலில் அடைக்கப்பட்ட மணிகண்டன் ஜாமீனில் வெளிவந்தார். காதல் திருமணம் செய்த மனைவியை பிரித்து காப்பகத்தில் ஒப்படைத்ததால் அவர் மன வேதனையுடன் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு மணிகண்டன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டன் மரணம் பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X