என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவு வாங்கிய பாலம் - பைக்குடன் 12 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் பலி
Byமாலை மலர்10 Nov 2019 3:25 PM GMT (Updated: 10 Nov 2019 3:25 PM GMT)
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளுடன் 12 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி மகன் பரமேஸ்வரன் (வயது 35) கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு நத்தம் சாலையில் வந்து கொண்டு இருந்தார். ரெட்டியபட்டி அருகே பாலப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை கவனிக்காமல் வந்த பரமேஸ்வரன் தடுப்பு கம்பி மீது மோதி 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பின் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் பரமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி மகன் பரமேஸ்வரன் (வயது 35) கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
நேற்று இரவு வேலை முடித்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக தனது நண்பரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு நத்தம் சாலையில் வந்து கொண்டு இருந்தார். ரெட்டியபட்டி அருகே பாலப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
இதனை கவனிக்காமல் வந்த பரமேஸ்வரன் தடுப்பு கம்பி மீது மோதி 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பின் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் பரமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X