search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபாட்டில்
    X
    மதுபாட்டில்

    தேனி அருகே விற்பனைக்கு பதுக்கி வைத்த 2149 மது பாட்டில்கள் பறிமுதல்

    தேனி அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2149 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் பெரியகுளம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2149 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்து 390 ஆகும்.

    இது தொடர்பாக போடி குலாளர் பாளையத்தைச் சேர்ந்த அரவிந்தன் (23), சிவராம்நகரைச் சேர்ந்த அறிவானந்தம் (39), பவுன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அரவிந்தன், அறிவானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிலாடிநபி விடுமுறை நாளில் மது பானங்களை விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    Next Story
    ×