என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனியில் நாளை டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு
Byமாலை மலர்9 Nov 2019 10:52 AM GMT (Updated: 9 Nov 2019 10:52 AM GMT)
மிலாடி நபி அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடி இருக்க வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
தேனி:
தமிழகத்தில் 10.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மதுபான விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் 10.11.2019-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடி இருக்க வேண்டும்.
அதுபோல மதுபான பார்களான (எப்.எல்-1), மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்.எல்-2), தங்கும் விடுதிகளுடன் அல்லது ஹோட்டல்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் (எப்.எல்-3), தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் அதன் முகவர்களால் நடத்தப்படும் ஹோட்டல்கள் (எப்.எல்-3 யு, எப்.எல்-3 யுயு, எப்.எல்-4 யு) மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் சில்லரை விற்பனை செய்யப்பட உரிமம் பெற்ற கடைகள் (எப்.எல்-11) ஆகியவைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். மேலும் மிலாடி நபி தினத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக்கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10.11.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடியிருக்க வேண்டும் என்றும், அன்றைய தினத்தில் எவ்வித மதுபான விற்பனையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் 10.11.2019-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி அன்று தேனி மாவட்டத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மூடி இருக்க வேண்டும்.
அதுபோல மதுபான பார்களான (எப்.எல்-1), மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுக்கூடங்கள் (எப்.எல்-2), தங்கும் விடுதிகளுடன் அல்லது ஹோட்டல்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் (எப்.எல்-3), தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகம் மற்றும் அதன் முகவர்களால் நடத்தப்படும் ஹோட்டல்கள் (எப்.எல்-3 யு, எப்.எல்-3 யுயு, எப்.எல்-4 யு) மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் சில்லரை விற்பனை செய்யப்பட உரிமம் பெற்ற கடைகள் (எப்.எல்-11) ஆகியவைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். மேலும் மிலாடி நபி தினத்தில் ஏதேனும் விதிமீறல்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட மதுபானக்கடைகள் மற்றும் உரிமதாரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X