search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    திண்டுக்கல் அருகே தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்

    திண்டுக்கல் அருகே தாய், தந்தையை அரிவாளால் மகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எரியோட:

    திண்டுக்கல் அருகே எரியோடு சுப்பிரமணிய பிள்ளையூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது55). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (48). இவர்கள் மகன் செந்தில். ஆடு மேய்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவரை சிகிச்சைக்கு அழைத்தபோது தாய், தந்தையுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று திடீரென ஆத்திரம் அடைந்த செந்தில் அரிவாளை எடுத்து தாய் தந்தையை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர்.

    அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தர்ராஜ் மற்றும் மாரியம் மாளை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த எரியோடு போலீசார் செந்திலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×