என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே தாய், தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்
Byமாலை மலர்9 Nov 2019 10:24 AM GMT (Updated: 9 Nov 2019 10:24 AM GMT)
திண்டுக்கல் அருகே தாய், தந்தையை அரிவாளால் மகன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எரியோட:
திண்டுக்கல் அருகே எரியோடு சுப்பிரமணிய பிள்ளையூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது55). விவசாயி. இவரது மனைவி மாரியம்மாள் (48). இவர்கள் மகன் செந்தில். ஆடு மேய்த்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் அவரை சிகிச்சைக்கு அழைத்தபோது தாய், தந்தையுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று திடீரென ஆத்திரம் அடைந்த செந்தில் அரிவாளை எடுத்து தாய் தந்தையை சரமாரியாக வெட்டினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுந்தர்ராஜ் மற்றும் மாரியம் மாளை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த எரியோடு போலீசார் செந்திலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X