search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சூளைமேட்டில் கஞ்சா விற்ற பெண் கைது

    சென்னை சூளைமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் ரூ. 2,300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    போரூர்:

    சூளைமேடு பெரியார் பாதை மீன் மார்க்கெட் அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அன்னை சத்யா நகர் காமராஜர் சாலையைச் சேர்ந்த லட்சுமி என்பவரை கைது செய்தனர்.

    அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் ரூ. 2,300 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. லட்சுமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வடபழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×