search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை திருட்டு
    X
    நகை திருட்டு

    ஆவடி அருகே பூட்டை உடைத்து நகை கொள்ளை

    ஆவடி அருகே பூட்டை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆவடி:

    ஆவடி அடுத்த காட்டூர் அமரிதாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29). கார்பெண்டர் வேலை செய்கிறார். இவரது மனைவி லீலாவதி (25). இவர் காட்டூர் சிட்கோவில் உள்ள தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலை 6.30 மணிக்கு லீலாவதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து லீலாவதி ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×