என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனை அருகே வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்- 4 பேருக்கு வலைவீச்சு
திருபுவனை:
திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் டி.பி.ஜி. நகரை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் மாஸ்வரதன் (வயது 19). இவர்களது வீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதையொட்டி நேற்று மாஸ் வரதன் கட்டுமான வேலைக்காக மதகடிப்பட்டில் பிளாஸ்டிக் குழாய்களை வாங்கிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த அருணாசலம், பாலகணேசன், தினேஷ், கண்ணதாசன் ஆகியோர் மாஸ் வரதனை வழிமறித்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் குழாய்களை எப்படி கொண்டு செல்லலாம்? என கூறி தகராறு செய்தனர்.
இதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அருணாசலம் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து மாஸ்வரதனை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாஸ் வரதன் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர், ஏட்டு வரதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருணாசலம் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்