என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குலசேகரம் அருகே திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை
திருவட்டார்:
குலசேகரத்தை அடுத்த தாழமூட்டுவிளை, அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 42). ஆட்டோ டிரைவர்.
மகேசுக்கும் கேரள மாநிலம் எரிமேலி பகுதியை சேர்ந்த சோபனா (40) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பின்பு சோபனா, அயக்கோட்டில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார். ஆரம்பத்தில் சுமுகமாக சென்ற இவர்களின் இல்லற வாழ்க்கையில் சமீபத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கடந்த சில வாரங்களாக குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சோபனா மனம் உடைந்து காணப்பட்டார். மகேஷ் நேற்றிரவு மார்த்தாண்டம் பகுதிக்கு சவாரிக்கு சென்றார்.
அங்கிருந்து இரவு 12 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் சமையல் அறையில் சோபான தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த மகேஷ் இது பற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் திருமணம் ஆன 10 மாதத்தில் சோபனா தற்கொலை செய்ததால் இது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் தக்கலை ஆர்.டி.ஓ. சரண்யா ஆகியோர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்