search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முத்துப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு- வாலிபர் கைது

    10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் சந்தியா (வயது15) மன்னார்குடி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தீபாவளி விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த மாணவி சந்தியா விடுமுறை முடிந்து கடந்த 3-ந்தேதி பள்ளிக்கு புறப்பட்டார். அவரது தந்தை ஜெயராமன் முத்துப்பேட்டையிலிருந்து பேருந்தில் அனுப்பி வைத்தார். அன்று இரவு 8 மணிக்கு பிறகும் சந்தியா வராததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் சந்தியாவை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

    இந்தநிலையில் முத்துப்பேட்டை கோவிலான் தோப்பு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அரவிந்த்(21) அடிக்கடி மாணவி பள்ளி செல்லும்போது வழிமறித்து பேச்சு கொடுத்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அரவிந்தை தேடி பார்த்தனர். அப்போது அரவிந்தும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது மகளை அரவிந்த் கடத்தி சென்று விட்டதாக புகார் செய்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் அரவிந்த் பேராவூரணியில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்று இருவரையும் மீட்டனர் போலீசார் மாணவி சந்தியாவிடம் விசாரணை நடத்தியதில் தன்னை அரவிந்த் வலுக்கட்டாயமாக கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி வாக்குமூலம் அளித்தார்.

    இதனையடுத்து போலீசார் அரவிந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து மாணவி சந்தியாவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×