search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    திருக்கனூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கனூர்:

    திருக்கனூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் பாபு (வயது33). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு பாபு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு வீட்டில் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த மோட்டார் சைக்கிளை யாரோ திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து பாபு இதுகுறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு திருக்கனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விக்கிரவாண்டி வெங்கடேஸ்வராநகரை சேர்ந்த கவியரசன் (31) என்பதும் இவர் பாபு வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடியவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கவியரசனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×