என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு
Byமாலை மலர்8 Nov 2019 10:14 AM GMT (Updated: 8 Nov 2019 10:14 AM GMT)
திண்டுக்கல் மார்க்கெட்டில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் 1 கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. கோழிக்கறிக்கு இணையாக காய்கறி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பீன்ஸ் ரூ.35, வெண்டைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.20, மிளகாய் ரூ.20, தக்காளி ரூ.20, கேரட் ரூ.30 என்ற விலையில் விற்பனையாகிறது. தொடர் மழையினால் உற்பத்தி குறைந்து வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மொத்தமாக வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். மேலும் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கும் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. விளைவிக்கப்பட்ட காய்கறிகள் உடனுக்குடன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் 1 கிலோ ரூ.100-க்கும், முருங்கைக்காய் ரூ.150-க்கும் விற்கப்படுகிறது. கோழிக்கறிக்கு இணையாக காய்கறி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
பீன்ஸ் ரூ.35, வெண்டைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.20, மிளகாய் ரூ.20, தக்காளி ரூ.20, கேரட் ரூ.30 என்ற விலையில் விற்பனையாகிறது. தொடர் மழையினால் உற்பத்தி குறைந்து வரத்து இல்லாததால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X