search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்.
    X
    முக ஸ்டாலின்.

    முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு

    முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

    மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் நடந்த தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஐகோர்ட் மதுரை கிளை

    இந்த வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

    Next Story
    ×