என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: மு.க.ஸ்டாலின் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜராக உத்தரவு
Byமாலை மலர்8 Nov 2019 8:57 AM GMT (Updated: 8 Nov 2019 8:57 AM GMT)
முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்ட அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வன் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் நடந்த தி.மு.க. கிராமசபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீமா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X