search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    திருவாரூரில் நாளை உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    திருவாரூரில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் காமராஜ் பங்கேற்கிறார்.
    கொரடாச்சேரி:

    உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருவாரூர் ஆரூரான் திருமண மண்டபத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான காமராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசுகிறார். கூட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட அவைத்தலைவர் கோ.அருணாசலம் தலைமை தாங்குகிறார். கட்சியின் அமைப்புச்செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் கே.கோபால் முன்னிலை வகிக்கிறார்.

    கூட்டத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது. முன்னதாக திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி வரவேற்கிறார். முடிவில் ஒன்றிய செயலாளர் பி.கே.யு.மணிகண்டன் நன்றி கூறுகிறார்.

    இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, விவசாய பிரிவு, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×