என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவெறும்பூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை
Byமாலை மலர்7 Nov 2019 1:23 PM GMT (Updated: 7 Nov 2019 1:23 PM GMT)
திருவெறும்பூர் அருகே பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர்:
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள தொண்டமான்பட்டி ரெயில் நிலையம் அருகே வசிப்பவர் விஜயலட்சுமி (வயது50). இவர் கூத்தைப்பாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு திரும்பிய விஜயலட்சுமி வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் மேலே இருந்து வெளிச்சம் வந்துள்ளது.
என்னவென்று பார்த்த போது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வீட்டிலிருந்த பீரோவை பார்த்போது அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து விஜயலட்சுமி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X