search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பிறந்த 7 நாளிலேயே பெண் குழந்தையை கொன்ற பாட்டி கைது

    தண்டராம்பட்டில் பிறந்த 7 நாள் ஆன குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ராயண்டபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி குப்பு (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் நாகராஜ், கூலித்தொழிலாளியாக உள்ளார்.

    அவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராணி மீண்டும் கர்ப்பமானார்.

    அதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ராணியை சே.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 7-வது நாளிலேயே இறந்தது.

    இது குறித்து தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு வி‌ஷம் புகட்டியதால் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தீவிர விசாரணை நடத்தினார். குழந்தையின் பாட்டி குப்பு, தனது மகனுக்கு 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியில் இருந்தார். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். பாலாடையில் வி‌ஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து குப்புவை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×