என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்த 7 நாளிலேயே பெண் குழந்தையை கொன்ற பாட்டி கைது
Byமாலை மலர்7 Nov 2019 12:06 PM GMT (Updated: 7 Nov 2019 12:06 PM GMT)
தண்டராம்பட்டில் பிறந்த 7 நாள் ஆன குழந்தையை கொன்ற பாட்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ராயண்டபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி குப்பு (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் நாகராஜ், கூலித்தொழிலாளியாக உள்ளார்.
அவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராணி மீண்டும் கர்ப்பமானார்.
அதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ராணியை சே.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 7-வது நாளிலேயே இறந்தது.
இது குறித்து தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு விஷம் புகட்டியதால் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தீவிர விசாரணை நடத்தினார். குழந்தையின் பாட்டி குப்பு, தனது மகனுக்கு 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியில் இருந்தார். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். பாலாடையில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து குப்புவை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ராயண்டபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி குப்பு (வயது 55). இவர்களுக்கு 2 மகன்கள். ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் நாகராஜ், கூலித்தொழிலாளியாக உள்ளார்.
அவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ராணி மீண்டும் கர்ப்பமானார்.
அதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ராணியை சே.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 7-வது நாளிலேயே இறந்தது.
இது குறித்து தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தைக்கு விஷம் புகட்டியதால் இறந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தீவிர விசாரணை நடத்தினார். குழந்தையின் பாட்டி குப்பு, தனது மகனுக்கு 3-வதும் பெண் குழந்தை பிறந்ததால், விரக்தியில் இருந்தார். இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தார். பாலாடையில் விஷம் கலந்து கொடுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்து குப்புவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X