என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடன் பிரச்சினை - மனைவியுடன் தகராறில் அரசு ஊழியர் தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2019 11:12 AM GMT (Updated: 7 Nov 2019 11:12 AM GMT)
புதுவை அருகே கடன் பிரச்சினையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மனைவி சங்கீதா (33).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கீதா மகளிர் குழு மூலமாக கடனாக ரூ.3 லட்சம் ஜீவாவுக்கு தெரியாமல் வாங்கினார்.
கடனை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் சங்கீதாவிடம் திருப்பி கேட்டனர்.
இந்த விஷயம் ஜீவாவுக்கு தெரிய வந்தது. எனக்கு தெரியாமல் எதற்கு கடன் வாங்கினாய்? என கூறி ஜீவா தனது மனைவி சங்கீதாவிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த ஜீவா நேற்றும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோபித்துக் கொண்டு அறையின் உள்ளே சென்ற ஜீவா வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
பின்னர் உள்ளே விளையாடிக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் சத்தம் போட்டான். உடனே சங்கீதா கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
பின்னர் ஜீவாவின் தம்பி கோபு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின் விசிறியில் ஜீவா தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.
பின்னர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து சங்கீதா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ஏட்டு கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை லாஸ்பேட்டை கருவடிகுப்பம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 40). பொதுப்பணித்துறை ஊழியர். இவரது மனைவி சங்கீதா (33).
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கீதா மகளிர் குழு மூலமாக கடனாக ரூ.3 லட்சம் ஜீவாவுக்கு தெரியாமல் வாங்கினார்.
கடனை திருப்பி கொடுக்காததால் கடன் கொடுத்தவர்கள் சங்கீதாவிடம் திருப்பி கேட்டனர்.
இந்த விஷயம் ஜீவாவுக்கு தெரிய வந்தது. எனக்கு தெரியாமல் எதற்கு கடன் வாங்கினாய்? என கூறி ஜீவா தனது மனைவி சங்கீதாவிடம் கூறி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
மேலும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து வந்த ஜீவா நேற்றும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் கோபித்துக் கொண்டு அறையின் உள்ளே சென்ற ஜீவா வெகு நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.
பின்னர் உள்ளே விளையாடிக்கொண்டு இருந்த அவரது மூத்த மகன் சத்தம் போட்டான். உடனே சங்கீதா கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
பின்னர் ஜீவாவின் தம்பி கோபு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மின் விசிறியில் ஜீவா தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.
பின்னர் அவரை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து சங்கீதா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, ஏட்டு கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X