என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் தீ குளித்து தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2019 11:04 AM GMT (Updated: 7 Nov 2019 11:04 AM GMT)
கோவை அருகே திருமணம் நடைபெற இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாழைதோட்டத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவரது மகள் எல்சியா (வயது 28). எம்.ஏ., ஆங்கிலம் படித்து முடித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி எல்சியாவுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த எல்சியா தனது சகோதரன் யோகேசிடம் செட்டிப்பாளையத்தில் தந்தை பெயரில் உள்ள நில பட்டாவை தருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் வேறு இடத்தில் பட்டா உள்ளதால் திருமணம் முடிந்த பிறகு பட்டாவை தருவதாக கூறினார். இது எல்சியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த யோகேஷ் தனது சகோதரியை காப்பாற்ற முயன்றார். அவரது உடலிலும் தீ பிடித்தது. 2 பேரும் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர்.
பின்னர் 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் எல்சியா பரிதாபமாக இறந்தார். யோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வாழைதோட்டத்தை சேர்ந்தவர் ஞானசிங். இவரது மகள் எல்சியா (வயது 28). எம்.ஏ., ஆங்கிலம் படித்து முடித்திருந்தார்.
இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி எல்சியாவுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
கடந்த 30-ந் தேதி வீட்டில் இருந்த எல்சியா தனது சகோதரன் யோகேசிடம் செட்டிப்பாளையத்தில் தந்தை பெயரில் உள்ள நில பட்டாவை தருமாறு கூறி உள்ளார். அதற்கு அவர் வேறு இடத்தில் பட்டா உள்ளதால் திருமணம் முடிந்த பிறகு பட்டாவை தருவதாக கூறினார். இது எல்சியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை பார்த்த யோகேஷ் தனது சகோதரியை காப்பாற்ற முயன்றார். அவரது உடலிலும் தீ பிடித்தது. 2 பேரும் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டனர்.
பின்னர் 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் எல்சியா பரிதாபமாக இறந்தார். யோகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X