என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வடவள்ளியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2019 10:24 AM GMT (Updated: 7 Nov 2019 10:24 AM GMT)
வடவள்ளியில் காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 24). இவர் கோவை வடவள்ளி அருகே தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். வெங்கடேஷ் ஒரு பெண்ணை காதலித்தார். சிறிது நாட்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்றுகோவை வால்பாறை எஸ். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் விரக்தியடைந்த கார்த்திக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால் மனவேதனையில் இருந்தார். இந்நிலையில் 2-வது மகள் விபத்தில் இறந்து விட்டார். இதனால் விரக்தியடைந்த புஷ்பராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 24). இவர் கோவை வடவள்ளி அருகே தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். வெங்கடேஷ் ஒரு பெண்ணை காதலித்தார். சிறிது நாட்களில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த வெங்கடேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
இதேபோன்றுகோவை வால்பாறை எஸ். பொன்னாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் விரக்தியடைந்த கார்த்திக் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மதுக்கரை நாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (34). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்றார். இதனால் மனவேதனையில் இருந்தார். இந்நிலையில் 2-வது மகள் விபத்தில் இறந்து விட்டார். இதனால் விரக்தியடைந்த புஷ்பராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X