என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரிவு
Byமாலை மலர்7 Nov 2019 10:12 AM GMT (Updated: 7 Nov 2019 10:12 AM GMT)
மழை ஓய்ந்ததால் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.
கூடலூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. கேரளாவிலும் பெய்த கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1630 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 127.45 அடியாக குறைந்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 64.85 அடியாக உள்ளது. அணைக்கு 1419 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1760 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.10 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.37 அடியாக உள்ளது. வருகிற 52 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. தேக்கடி 0.2, கூடலூர் 3.5, சண்முகா நதி அணை 2, மருதாநதி 7.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. கேரளாவிலும் பெய்த கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது. ஆனால் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக குறைந்துள்ளது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1630 கன அடி நீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டம் 127.45 அடியாக குறைந்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 64.85 அடியாக உள்ளது. அணைக்கு 1419 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீருக்காக 1760 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55.10 அடியாக உள்ளது. 146 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.37 அடியாக உள்ளது. வருகிற 52 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. தேக்கடி 0.2, கூடலூர் 3.5, சண்முகா நதி அணை 2, மருதாநதி 7.9 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X