search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கள்ளிக்குடி அருகே ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

    கள்ளிக்குடி அருகே ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமங்கலம்:

    திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் குருராஜ் (வயது30).

    தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், அரசு பொது தேர்வுக்கும் படித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில நாட்களாக குருராஜ் மனவேதனையில் இருந்தாராம்.

    நேற்று இரவு வீட்டில் இருந்து அவர் வெளியே சென்றுள்ளார். கள்ளிக்குடி அருகே கே.வெள்ளாகுளம் பகுதி ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்ற குருராஜ் அந்த வழியே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார்.

    ரெயில் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விருதுநகர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து குருராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குருராஜ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×