என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடியில் அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம்
Byமாலை மலர்7 Nov 2019 9:34 AM GMT (Updated: 7 Nov 2019 9:34 AM GMT)
ஆவடியில் மு.க.ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் நாசர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவர்கள் அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தேசிங்கு, பூவை ஜெயக்குமார், கூலர் ராஜேந்திரன், கிறிஸ்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன் மோதிலால் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்டச் செயலாளர் நாசர் கூறும் போது, அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசிய பேச்சை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கருத்து கூறி இருந்தார். இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் திருவள்ளூர் தெற்கு மாவட்டம் தி.மு.க. சார்பில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் நாசர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
அவர்கள் அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவடி நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் தேசிங்கு, பூவை ஜெயக்குமார், கூலர் ராஜேந்திரன், கிறிஸ்டி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன் மோதிலால் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்டச் செயலாளர் நாசர் கூறும் போது, அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பேசிய பேச்சை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆவடி சட்டமன்ற தொகுதி முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X