என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி அருகே கியாஸ் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்7 Nov 2019 8:51 AM GMT (Updated: 7 Nov 2019 8:51 AM GMT)
கும்மிப்பூண்டி அருகே கியாஸ் தொழிற்சாலையில் 5 பேரை வேலை நீக்கம் செய்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசனுக்கு சொந்தமான சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு தனியார் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 19 வருடங்களாக ஆலைக்கு நிலம் வழங்கிய 49 பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் 5 பேரை ஆலை நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று தொழிற்சாலை முன்பு சி.ஐ.டி.யூ-வின் தமிழ்நாடு மாநில பெட்ரோலிய தொழிற்சங்க தலைவர் கே.விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணி இன்று பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஆலை நிர்வாகத்தினரும் போலீசார் முன்னிலையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேசனுக்கு சொந்தமான சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு தனியார் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 19 வருடங்களாக ஆலைக்கு நிலம் வழங்கிய 49 பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் 5 பேரை ஆலை நிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று தொழிற்சாலை முன்பு சி.ஐ.டி.யூ-வின் தமிழ்நாடு மாநில பெட்ரோலிய தொழிற்சங்க தலைவர் கே.விஜயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனால் ஆலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணி இன்று பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் தொழிற்சங்க நிர்வாகிகளும், ஆலை நிர்வாகத்தினரும் போலீசார் முன்னிலையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X