என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2019 7:50 AM GMT (Updated: 7 Nov 2019 7:50 AM GMT)
திருவள்ளூரில் அதிக நேரம் லேப்-டாப் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேட்டுக்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவரது மகன் கோகுல கண்ணன்(17). திருவள்ளூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மேட்டுக் கண்டிகையிலிருந்து திருவள்ளூருக்கு வந்து செல்ல மகனுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் பள்ளி அருகில் உள்ள அகரம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து ரமேஷ் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கோகுலகண்ணன் லேப்-டாப்பை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோகுலகண்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோகுல கண்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோகுலகண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் 10-ம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண் பெற்று இருந்தார்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மேட்டுக்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவரது மகன் கோகுல கண்ணன்(17). திருவள்ளூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மேட்டுக் கண்டிகையிலிருந்து திருவள்ளூருக்கு வந்து செல்ல மகனுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் பள்ளி அருகில் உள்ள அகரம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து ரமேஷ் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கோகுலகண்ணன் லேப்-டாப்பை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோகுலகண்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோகுல கண்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோகுலகண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் 10-ம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண் பெற்று இருந்தார்.
இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X