search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருவள்ளூரில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை

    திருவள்ளூரில் அதிக நேரம் லேப்-டாப் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மேட்டுக்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. இவரது மகன் கோகுல கண்ணன்(17). திருவள்ளூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    மேட்டுக் கண்டிகையிலிருந்து திருவள்ளூருக்கு வந்து செல்ல மகனுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் பள்ளி அருகில் உள்ள அகரம் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து ரமேஷ் குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு கோகுலகண்ணன் லேப்-டாப்பை நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர் கண்டித்து திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த கோகுலகண்ணன் அறையில் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கோகுல கண்ணனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோகுலகண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் 10-ம் வகுப்பு தேர்வில் 470 மதிப்பெண் பெற்று இருந்தார்.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×