என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரையூர் அருகே தற்கொலை செய்த வாலிபரின் உடல் எரிப்பு- தந்தை-உறவினர்கள் மீது வழக்கு
Byமாலை மலர்6 Nov 2019 4:48 PM GMT (Updated: 6 Nov 2019 4:48 PM GMT)
தற்கொலை செய்த வாலிபரின் உடலை போலீசுக்கு தெரியாமல் எரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் சோனை மகன் ஜெயபாண்டி. (வயது 23). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை போலீசாருக்கு தெரிவிக்காமல் சோனை மற்றும் உறவினர்கள் அவசர அவசரமாக அங்குள்ள சுடுகாட்டில் ஜெயபாண்டி உடலை எரித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி ராஜா, பேரையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட தகவலை தெரிவிக்காமல் வாலிபரின் உடலை எரித்ததாக சோனை மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் ஜெயபாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X