search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூரில் முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை

    கரூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே தெற்கு தோட்டத் தைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது51). இந்நிலையில் குழந்தைவேல் கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கணவன், மனைவி இடையே வாய்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. 

    வழக்கம் போல படுக்கை அறைக்குச் சென்றார். காலையில் வெகு நேரம் ஆகியும், படுக்கை அறையில் இருந்து குழந்தைவேல் வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தபோது படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுத் பிணமாக தொங்கினார். 

    தகவலறிந்த  வேலாயுதம்பாளையம் போலீஸில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமா பிரபா சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×