search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    குளச்சலில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு

    குளச்சல் மெயின் ரோட்டில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    குளச்சல்:

    குளச்சல் மெயின் ரோட்டில் சாகுல் அமீது என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் ஊழியர் இஸ்மாயில் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இன்று காலை வழக்கம்போல கடையை திறப்பதற்காக இஸ்மாயில் வந்தார்.

    அப்போது கடையின் பூட்டுகள் அறுக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த 6 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.1000 ரொக்கப்பண்ம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இந்த துணிகர திருட்டு பற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×