என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சலில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள்-பணம் திருட்டு
Byமாலை மலர்6 Nov 2019 2:22 PM GMT (Updated: 6 Nov 2019 2:22 PM GMT)
குளச்சல் மெயின் ரோட்டில் கடையில் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
குளச்சல்:
குளச்சல் மெயின் ரோட்டில் சாகுல் அமீது என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் ஊழியர் இஸ்மாயில் நேற்று இரவு விற்பனை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். இன்று காலை வழக்கம்போல கடையை திறப்பதற்காக இஸ்மாயில் வந்தார்.
அப்போது கடையின் பூட்டுகள் அறுக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த 6 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.1000 ரொக்கப்பண்ம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இந்த துணிகர திருட்டு பற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X