search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    ஈத்தாமொழி அருகே இளம்பெண் மாயம்

    ஈத்தாமொழி அருகே வீட்டில் இருந்த இளம்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழியை அடுத்த தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சிங்காராஜ். இவரது மகள் அகிலா (வயது 18). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அகிலா உடல்நிலை சரி இல்லை என வீட்டில் இருந்தார். பெற்றோர் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தனர். இதனால் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் அவர்கள் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மகள் மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல்ஜெனிஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×