என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை - பொதுமக்கள் போராட்டம்
Byமாலை மலர்6 Nov 2019 11:39 AM GMT (Updated: 6 Nov 2019 11:39 AM GMT)
திசையன்விளையில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை:
திசையன்விளை முருகேசபுரத்தில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகே பஸ் நிறுத்தம், கோவில் ஆகியவை உள்ளன. கோவில், பஸ்நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முருகேசபுரம் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களை இதுதொடர்பாக தாசில்தாரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் திசையன்விளை தாசில்தாரிடம் மனு கொடுக்க சென்றனர். அங்கு தாசில்தார் இல்லாததால் துணை தாசில்தார் ரமேஷிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பொதுமக்கள் அளித்தனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை முருகேசபுரத்தில் நேற்று முன்தினம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் அருகே பஸ் நிறுத்தம், கோவில் ஆகியவை உள்ளன. கோவில், பஸ்நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்களுக்கு டாஸ்மாக் கடையால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி முருகேசபுரம் பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களை இதுதொடர்பாக தாசில்தாரிடம் மனு கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து பொதுமக்கள் திசையன்விளை தாசில்தாரிடம் மனு கொடுக்க சென்றனர். அங்கு தாசில்தார் இல்லாததால் துணை தாசில்தார் ரமேஷிடம் கோரிக்கை அடங்கிய மனுவை பொதுமக்கள் அளித்தனர். டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X