என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
Byமாலை மலர்6 Nov 2019 11:30 AM GMT (Updated: 6 Nov 2019 11:30 AM GMT)
வாணாபுரம் அத்திபாடி உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
வாணாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த அத்திபாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் பணியாற்றி வந்தனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது55). என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றுள்ளார்.
இதனையடுத்து பள்ளியில் பாடம் நடத்துவதற்காக தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்த மதலைமுத்து (49) என்பவர் தற்காலிகமாக அத்திபாடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்தி வருகிறார். அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வாணாபுரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பள்ளிக்கு வாணாபுரம் போலீசார் வந்து மாணவிகளிடையே தனித்தனியாக விசாரணை நடத்தினர்.தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மதலைமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்த அத்திபாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியரும் பணியாற்றி வந்தனர்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தச்சம்பட்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது55). என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சென்றுள்ளார்.
இதனையடுத்து பள்ளியில் பாடம் நடத்துவதற்காக தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்த மதலைமுத்து (49) என்பவர் தற்காலிகமாக அத்திபாடி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்தார். இவர் கடந்த 2 நாட்களாக பள்ளியில் பாடம் நடத்தி வருகிறார். அப்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து வாணாபுரம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து பள்ளிக்கு வாணாபுரம் போலீசார் வந்து மாணவிகளிடையே தனித்தனியாக விசாரணை நடத்தினர்.தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மதலைமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X