என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரியில் கோவிலுக்கு சென்ற இளம்பெண் மாயம்
Byமாலை மலர்6 Nov 2019 11:20 AM GMT (Updated: 6 Nov 2019 11:20 AM GMT)
நாங்குநேரியில் கோவிலுக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பத்மநேரி வடமலைசமுத்திரம் சங்கர்நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), விவசாயி. இவரது மகள் இசக்கியம்மாள் (19). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக களக்காட்டில் உள்ள தனியார் பிரட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சங்கர் நாங்குநேரியில் உள்ள தனது மனைவி நாச்சியாரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் இசக்கியம்மாள் கடந்த 2-ந் தேதி மாலை நாங்குநேரியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உறவினர்கள் வீடு மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் வழக்குப்பதிவு செய்து இசக்கியம்மாள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு அருகே உள்ள பத்மநேரி வடமலைசமுத்திரம் சங்கர்நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 45), விவசாயி. இவரது மகள் இசக்கியம்மாள் (19). இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக களக்காட்டில் உள்ள தனியார் பிரட் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சங்கர் நாங்குநேரியில் உள்ள தனது மனைவி நாச்சியாரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் இசக்கியம்மாள் கடந்த 2-ந் தேதி மாலை நாங்குநேரியில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் உறவினர்கள் வீடு மற்றும் தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தார். எனினும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் வழக்குப்பதிவு செய்து இசக்கியம்மாள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X