என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதி பால் வியாபாரி பலி
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 63). இவர் தற்போது குடும்பத்துடன் உடுமலைப்பேட்டையில் பால் வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை ஓடைப்பட்டியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்தார்.
மீண்டும் உடுமலைப்பேட்டை செல்வதற்காக பஸ் நிலைய ரோட்டில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.அப்போது மதுரையில் இருந்து பெருந்துறை நோக்கி நிலக்கரி ஏற்றி வந்த லாரி செல்லப்பன் மீது மோதியது. சாலையில் இருந்த பேரிகார்டை கவனிக்காமல் மோதியதால் செல்லப்பன் லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டன்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பலியான செல்லப்பன் உடல் 2 துண்டுகளாக கிடந்ததால் அதனை சாக்கு மூட்டையில் வைத்து ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பஸ் நிலைய சாலையில் விபத்துகளை தடுப்பதற்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வளைவில் திரும்பி உள்ளே நுழையும் போது அங்கு வைக்கப்படும் பேரிகார்டுகள் தெரியாததால் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது.
எனவே விபத்துகளை குறைக்க வைக்கப்படும் பேரிகார்டுகள் உயிரை பறிக்கும் சாதனங்களாக மாறி வருகிறது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் வெள்ளிமலை (40) ஒட்டன்சத்திரம் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்