search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருத்துறைப்பூண்டி அருகே காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொன்ற வாலிபர் கைது

    திருத்துறைப்பூண்டி அருகே வீட்டில் திருடியதை பார்த்ததால் காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். காங்கிரஸ் பிரமுகர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 65). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். சம்பவத்தன்று மாலை ராஜேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் பிணமாக கிடந்தார்.

    இதுபற்றி திருத்துறைப் பூண்டி போலீசுக்கு புகார் செய்யப்ட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் ராஜேஸ்வரியை கொலை செய்தது திருத்துறைப்பூண்டி மடப்புரம் பிள்ளைதெருவை சேர்ந்த சலவை தொழிலாளி முருகானந்தம் (38) என்பவர் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ராஜேஸ்வரியை அவர் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்ததாக தெரிவித்தார்.

    பின்னர் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

    சம்பவத்தன்று நான் ராஜேஸ்வரி வீட்டுக்குள் நுழைந்தேன். அப்போது நான் , ராஜேஸ்வரியிடம் ராமச்சந்திரன் முக்கியமான பொருளை வீட்டில் மறந்து வைத்து விட்டார். அதனை எடுக்க வேண்டும் என்று கூறினேன்.

    இதை நம்பிய ராஜேஸ்வரி, என்னிடம் எடுத்து விட்டு போ என்று கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்தேன்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். ஏன் பொய் சொல்லி வீட்டில் வந்து பணம் திருடுகிறாய் என்று சத்தம் போட்டார். இதனால் எனக்கு பயம் வந்து விட்டது. எங்கே என்னை காட்டி கொடுத்து விடுவாரோ? என்று பயந்தேன்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த நான்,மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஸ்வரியின் கழுத்தை அறுத்தேன். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் கொள்ளையடித்த பணத்தோடு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். ஆனால் எப்படியோ போலீசார் கண்டுபிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

    கொலையாளி முருகானந்திடம் இருந்து திருடிய பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

    Next Story
    ×