என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைரோடு அருகே மது போதையில் காவலாளியை தாக்கிய கும்பல்
Byமாலை மலர்6 Nov 2019 10:15 AM GMT (Updated: 6 Nov 2019 10:15 AM GMT)
கொடைரோடு அருகே மது போதையில் காவலாளியை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் போஸ் (வயது 60). இவர் ராஜதானிக் கோட்டை மலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கொடைரோட்டில் இருந்து ராஜதானிக்கோட்டைக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது சிறுமலை நீர் தேக்கம் அருகே ஒரு கும்பல் மது அருந்தி ரகளையில் ஈடுபட்டனர். போஸ் அவர்களை கடந்து செல்லும் போது திடீரென அந்த கும்பல் அவரிடம் தகராறு செய்தது.
போதை தலைக்கேறிய நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் போசை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போசை தாக்கியதாக சதீஸ்குமார், அழகேசன், அஜித் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X