என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுவாமிமலை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
Byமாலை மலர்6 Nov 2019 9:43 AM GMT (Updated: 6 Nov 2019 9:43 AM GMT)
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் காவிரி, அரசலாறில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
அப்போது காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் (வயது 32), மகேந்திரன்(28), பிரவீன்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் அரசலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த வளையப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற மோகனசெல்வம் (28) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவாமிமலை போலீசார் தெரிவித்தனர்.
கும்பகோணம் அருகே சுவாமிமலை பகுதியில் காவிரி, அரசலாறில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.
அப்போது காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்த சுவாமிமலை கலைஞர் காலனியை சேர்ந்த சுரேஷ் (வயது 32), மகேந்திரன்(28), பிரவீன்(20) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதேபோல் அரசலாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி வந்த வளையப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்கிற மோகனசெல்வம் (28) என்ற வாலிபரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆற்று மணல் அனுமதியின்றி கடத்தி சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவாமிமலை போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X